Sunday, December 29, 2013

முலே சாஸ்திரி – 2

நேற்றைய தொடர்ச்சி.........

         ஆயினும்முலே சாஸ்திரி தம்முடைய கரத்தை நீட்டிக்கொண்டே ஸாமுத்திரிகா பலன்கள் சொல்வதற்காக பாபாவின் கரத்தை நாடி முன்னேறினார். அம்மாதிரி அவர் முன்னேறியதைத் தாம் பார்க்கவேயில்லாததுபோல் பாபா அதைக் கண்டுகொள்ளவில்லை.
    முலே சாஸ்திரியின் நீட்டிய கரங்களில் நான்கு வாழைப்பழங்களை வைத்துவிட்டு அவரை அமரும்படி சொன்னாரே  தவிரகையைக் காட்ட மறுத்துவிட்டார்.
       இறைவனின் ஸேவையில் வாழ்நாள் முழுவதும் உடம்பைத் தேய்த்தவருக்கு ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரம் என்ன பலன் தரும். பக்தர்களுக்குத் தாயும் தந்தையுமான ஸாயீசகல விருப்பங்களும் நிறைவேறியவரல்லரோ.
      பாபாவினுடைய விருப்பமற்ற நிலையையும் ஸாமுத்திரிகா லக்ஷண சாஸ்திரத்தை உதாசீனம் செய்ததையும் பார்த்த முலே சாஸ்திரிஇது வீண் முயற்சி என்று தீர்மானித்துமேலும் முயற்சி செய்வதை நிறுத்திக்கொண்டார். சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்துகொண் டிருந்துவிட்டுமற்றவர்களுடன் வாடாவிற்குத் திரும்பிவிட்டார். ஸ்நானம் செய்த பின்,  தாம் தினமும் செய்யும்  அக்கினிஹோத்திரத்தைச்  செய்ய ஆரம்பித்தார்.
      பாபா, ''இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக்கொண்டு  செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி­க்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்குக் கிளம்பினார்.
      காவிச்சாயத்தை வைத்துக்கொண்டு பாபா என்ன செய்யப்போகிறார் என்றும்என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப்பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தனர். 
       இம்மாதிரி ஸங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதி­லிருந்து என்ன புரிந்துகொள்ள முடியும் ஆனால் அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக்கொண்டு அதைப்பற்றி  யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களைக் கண்டுபிடிக்கலாம்.
         மேலும்ஒரு ஞானியினுடைய திருவாய்மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள்பொதிந்தவை. யாரால் அச்சொற்களை எடைபோட முடியும்?       முத­ல் கவனமுள்ள எண்ணம்பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழிமுறை.  பிறகுஅவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது.
       இந்த சித்தாந்தத்தின் அடிப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப்பரிமாணத்தையும் வெளிப்படுத்தும்.
       பாபா லெண்டியி­ருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒ­க்க ஆரம்பித்தன. பாபு ஸாஹேப் ஜோக் சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்.
      ''ஹாரதி நேரம் நெருங்கிவிட்டதுநீங்கள் மசூதிக்கு வருகிறீர்களா? மடி ஆசாரத்தை விடாப்பிடியாகக் கடைப்பிடித்த முலே சாஸ்திரிதம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார்.
     ஆகவே அவர் பதிலுரைத்தார், ''நான் அப்புறமாகப் பிற்பக­ல் தரிசனம் செய்துகொள்கிறேன்”.. ஜோக் ஹாரதிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
     பாபா திரும்பி வந்துவிட்டிருந்தார்ஆசனத்தில் அமர்ந்துகொண்டு  ஜனங்களோடு பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராகத் தங்கள் பூஜையை முடித்தனர்ஹாரதி ஆரம்பிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன. 
      திடீரென்று பாபா சொன்னார், ''இன்று வந்த பிராமணரிடமிருந்து தக்ஷிணை வாங்கிக்கொண்டு வாருங்கள். உடனேஸ்ரீமான் புட்டியிடம் தக்ஷிணை வாங்கிக்கொண்டு வருவதற்குக் கிளம்பினார்.
      முலே ஸ்நானத்தை முடித்துவிட்டுமடி ஆசாரமான ஆடைகளை அணிந்துகொண்டு யோகாசன நிலையில் நிம்மதியான மனத்துடன் உட்கார்ந்துகொண் டிருந்தார்.
      பாபா அனுப்பிய செய்தியைக் கேட்டவுடன் அவருடைய மனத்தை சந்தேகம் தாக்கியது. ''நான் எதற்காக தக்ஷிணை கொடுக்கவேண்டும்நான் தினமும் அக்கினிஹோத்திரம் செய்யும் நிர்மலமான பிராமணன்.
     ''பாபா ஓர் உயர்ந்த ஞானியாக இருக்கலாம். ஆனால்நான் அவருக்கு எவ்விதத்திலும் கடமைப்பட்டவன் அல்லேன்! என்னை ஏன் அவர் தக்ஷிணை கேட்கிறார்? அவருடைய மனம் தத்தளித்தது.
     ''அதே சமயம்ஒரு சிறந்த ஞானி தக்ஷிணை கேட்கிறார்இச்செய்தியை ஒரு கோடீச்வரர் எனக்குக் கொண்டுவருகிறார். முலே சாஸ்திரிக்கு மனத்தில் சந்தேகம் இருந்தபோதிலும் கொஞ்சம் தக்ஷிணை எடுத்துக்கொண்டார்.
    இன்னும் ஒரு சந்தேகமும் இருந்தது. ஆரம்பித்துவிட்ட சடங்குகளை முடிக்காமல் மசூதிக்கு எப்படிச் செல்வதுஆனால், (பாபாவுக்கு தக்ஷிணை) இல்லை என்று சொல்லவும் மனமில்லை. சந்தேகம் கொண்ட மனத்திற்கு முடிவெடுக்கும் உறுதி இருக்காதுஏதாவது ஒரு வழியில் செல்லாதுஅவர் திரிசங்கு நிலையி­ருந்தார்.    ஆயினும்அவர் போவதற்கு  முடிவுசெய்துஸபாமண்டபத்தினுள் நுழைந்து தூரத்திலேயே நின்றுகொண்டார்.
     ''நான் மடி ஆசாரமாக உடை உடுத்திக்கொண் டிருக்கிறேன்மசூதி ஓர் ஆசாரமில்லாத இடம்பாபாவின் அருகில் நான் எப்படிப் போகமுடியும்?  இவ்வாறு நினைத்துக்கொண்டு கூப்பிய கைகளுக்குள் இருந்த பூக்களை பாபாவின்மீது புஷ்பாஞ்ஜலி­ செய்தார். ஈதனைத்தும் தூரத்தி­ருந்துதான் நடந்தது.
  ஓ! அவருடைய கண்ணெதிரிலேயே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அமர்ந்திருந்த ஆசனத்தில் பாபா தெரியவில்லைமாறாகத் தம் பூஜ்யகுரு கோலப் மஹராஜையே பார்த்தார்.



ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...